5 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு..!

Default Image

தமிழக்தில் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.

தமிழகத்தில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக மதுரை, சிவகங்கை, சேலம், தர்மபுரி, புதுக்கோட்டை ஆகிய ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்ப.

திருவள்ளூர் வேலூர் ராணிப்பேட்டை திருப்பூர் திருவண்ணாமலை காஞ்சிபுரம் திருச்சி செங்கல்பட்டு உள்ளிட்ட 21 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும் சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் லேசான முதல் மிதமான மழைபெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்