கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 5 பேருந்துகள் தீ பிடித்து எரிந்துள்ளது!

Default Image

சென்னை கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னையிலுள்ள கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஐந்து ஆம்னி பேருந்துகள் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் 4 தீயணைப்பு வாகனங்களில் வந்து பேருந்தில் ஏற்பட்ட தீயை அணைத்து கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் இதில் 3 ஆம்னி முழுமையாக எரிந்து நாசமடைந்துள்ளது. இரண்டு பேருந்துகள் லேசாக எரிந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. திடீரென தீப்பிடித்து எரிந்த பேருந்துகளால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு உருவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்