டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை!

Default Image

டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமலில் உள்ளது.

இதனால், இன்று அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்பட்டுள்ள நிலையில், மதுபான பிரியர்கள் அனைவரும் நேற்றே தங்களுக்கு தேவையான மதுவை வாங்கி வைத்துக்கொள்வதுண்டு. இதனால், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் டாஸ்மாக்கில் நேற்று ஒரே நாளில் ரூ.250.25 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னையில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டதால் முதன்முறையாக ரூ.250 கோடியை வசூல் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்