மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக்கண்ணாடி ரூ.2.55 கோடிக்கு ஏலம்.!

Default Image

பிரிட்டனில் மகாத்மா காந்தி பயன்படுத்திய மூக்குக் கண்ணாடி ரூ.2.55 கோடிக்கு மேல் ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.

பிரிட்டன் நாட்டை சேர்ந்த ஈஸ்ட் பிராஸ்டால் ஏல நிறுவனம், சுமார் 4 வாரங்களுக்கு முன்பு எங்களுடைய கடிதப்பெட்டியில் இந்த மூக்குக்கண்ணாடி காந்தி பயன்படுத்திருந்தார். இதனை காந்தியே என் மாமாவிடம் அளித்ததாக தெரிவித்திருந்தார். இந்த மூக்குக் கண்ணாடியை காந்தி தென் ஆப்ரிக்காவில் இருக்கும் போது பயன்படுத்திருந்தார் என்று ஏலம் விட்ட நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் அந்நிறுவனம் கூறுகையில், இந்த ஏலம் எங்களுக்கு மிகப்பெரிய சாதனையை முதன் முதலாக கொடுத்துள்ளது. அதுமட்டுமில்லாமல் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் அமைந்துவிட்டது. காந்தியின் கண்ணாடியை ஏலம் எடுத்தவரின் பெயரை தங்களால் வெளியிட முடியாது. ஆனால், அவர் தென் மேற்கு இங்கிலாந்தை சேர்ந்த ஒரு முதியவர் ஆவர். இந்திய மதிப்பில் ரூ.2.55 கோடிக்கு காந்தியின் கண்ணாடியை ஏலம் எடுத்துள்ளார் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்