தூய்மை பணியாளர்கள் பாதங்களில் மலர் தூவிய பாஜக மாநில தலைவர்!

Default Image

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன், தூய்மை பணியாளர்களின் பாதங்களில் மலர் தூவி அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, இந்தாண்டு விநாயகர் சிலைகளை பொது இடங்களில் வைத்து வழிபட தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனால் மக்கள் அனைவரும் வீடுகளில் இருந்தே விநாயகர் சதுர்த்தியை கொண்டாடி வருகின்றனர். இந்தநிலையில், பாஜக தலைமை அலுவலகமான கமலாயத்தில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அதில் மாநில தலைவர் எல்.முருகன் மற்றும் நிர்வாகிகள் சிலர் கலந்துகொண்டனர்.

அந்த நிகழ்ச்சியின் முடிவில், கொரோனா களத்தில் பணியாற்றும் முன்களப் பணியாளர்களை பாராட்டும் விதமாக, அவர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. மேலும், தூய்மை பணியாளர்களின் பாதங்களில் மலர் தூவி, அவர்களை பாராட்டி, மரியாதை செலுத்தினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 15042025
Today Live 14042025
Madurai MP Su Venkatesan
Harris Jayaraj
Nellai Palayamkottai 8th student
MK Stalin
sanjiv goenka rishabh pant
Porkodi Armstrong