உலகம் கொரோனாவிலிருந்து விடுபட மணக்குள விநாயகர் அருள் புரிவார் – முதல்வர் நாராயணசாமி!

Default Image

உலகம் கொரோனாவிலிருந்து விடுபட மணக்குள விநாயகர் அருள் புரிவார் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி வாழ்த்து கூறியுள்ளார்.

விநாயகர் சதுர்த்தி விழா இன்று நாடு முழுவதும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரானா வைரஸ் ஊரடங்கு காரணமாக முதல்வரின் அறிவுறுத்தல் படி கட்டுப்பாடுகளுடன் சில இடங்களில் எளிமையான முறையில் விநாயகர் சதுர்த்தி இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் புகழ்பெற்ற மணக்குள விநாயகர் கோவிலில் புதுவை முதல்வர் நாராயணசாமி அவர்கள் இன்று சாமி தரிசனம் செய்துள்ளார். வழிபாடு செய்த பின்பு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கொரோனா நோய் பரவுதலை தடுக்க மத்திய அரசு விதித்த தடையின் காரணமாக சிலைகள் வைப்பதற்கு ஊர்வலம் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனை இந்து அமைப்பினரும் பொதுமக்களும் ஏற்று எளியமுறையில் விழாவை கொண்டாடி மகிழ்வது வரவேற்கத்தக்கது என்றும், கொரோனா தொற்றை தடுக்கும் விதமாக இது அமையும் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும் சக்தி வாய்ந்த மணக்குள விநாயகர் உலகம் முழுவதும் உள்ள கொரோனா வைரஸ் விலகுவதற்கு அருள் புரிவார் என்றும், விரைவில் மக்கள் சகஜமான வாழ்க்கைக்கு திரும்ப வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்