பரிசோதனை செய்தவர்கள் யார் வேண்டுமானாலும் அரசு விழாவுக்கு வரலாம் – முதல்வர்!

Default Image

கொரோனா பரிசோதனை செய்தவர்கள் யார் வேண்டுமானாலும் அரசு விழாக்களில் பங்கேற்கலாம், தடையில்லை என முதல்வர் பழனிசாமி அவர்கள் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தாக்கம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. கொரோனா தொற்றால் மற்றவர்களிடம் பேசக்கூட பலர் தற்போது தயங்கி வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த அரசாங்கமும் பல்வேறு பாதுகாப்பது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், தர்மபுரியில் அண்மையில் பங்கேற்ற ஆய்வு கூட்டத்தில் கலந்துகொள்ள சென்ற திமுக எம்பி செந்தில்குமாருக்கு  அனுமதி மறுக்கப்பட்டது. இதுகுறித்து திமுக தலைவர் முக ஸ்டாலின் கண்டன அறிக்கையை வெளியிட்டிருந்தார். இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி நாமக்கல் ஆய்வு கூட்டத்தில் கூறுகையில், கொரோனா பரிசோதனை செய்துவிட்டு அரசு விழாக்களில் யார் வேண்டுமானாலும் பங்கேற்கலாம் அதற்க்கு தடையில்லை என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்