எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – மருத்துவமனை நிர்வாகம்

Default Image

எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து  கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது .இதுகுறித்து எம்ஜிஎம் மருத்துவமனை இரவு 8.30 மணி அளவில் மருத்துவ அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், கொரானா நோய்த்தொற்று காரணமாக எம்ஜிஎம் மருத்துமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ள எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

மேலும்  எக்கோ மற்றும் வென்டிலேட்டர் உதவியுடன் ஐசியூவில் தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் , எம்ஜிஎம் மருத்துவ குழுவினர் தேசிய மற்றும் சர்வதேச மருத்துவர்களின் தொடர்பில் இருக்கிறார்கள் என்றும் தொடர்ந்து எஸ்பிபி யின் உடல்நிலை கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள மருத்துவ அறிக்கையில்  தெரிவிக்கப்பட்டுள்ளது .

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்