மதுரை மாவட்டம் பேச்சியம்மன் கோவிலில் 3 ஐம்பொன் சிலைகள் திருட்டு..!

Default Image

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் உள்ள ஒரு பேச்சி அம்மன் கோவிலில் 15 கிலோ எடை கொண்ட 3 ஐம்பொன் சிலைகள் மற்றும் 35 கிலோ எடை கொண்ட குத்துவிளக்கு திருட்டு.

மதுரை மாவட்டம் சிம்மக்கல் பகுதியில் ஒரு பேச்சி அம்மன் கோவிலில் உள்ளது, இந்த பேச்சியம்மன் கோவிலில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 9 மணி அளவில் கோவிலின் சுவற்றின் மீது ஏறி மர்மநபர்கள் கோவிலுக்குள் புகுந்தனர்.

மேலும் அந்த மர்ம நபர்கள் கோவிலின் உட்கதவை நீண்ட நேரமாக திறக்க முயற்சி செய்துள்ளார்கள் மேலும் நீண்ட நேரம் கழித்து சோர்வடைந்த அந்த மர்ம நபர்கள் அங்கிருந்த ஒரு குடத்தில் தண்ணீர் குடித்துவிட்டு மீண்டும் கதவை திறக்க முயற்சி செய்துள்ளனர்.

எவ்வளவு முயற்சி செய்தும் பூட்டை திறக்கமுடியவில்லை இதனால் அந்த மர்ம நபர்கள் அதற்கு பின் புறத்திலுள்ள கதவை உடைத்து பேச்சி அம்மன் கோவிலில் உள்ள 15 கிலோ எடை கொண்ட 3 ஐம்பொன் சிலைகள் மற்றும் 35 கிலோ எடை கொண்ட குத்துவிளக்கு திருடு போனது தெரிய வந்துள்ளது.

இந்த திருட்டு சம்பவத்தை தொடர்ந்து இந்நிலையில் இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி அந்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar