கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய உடல் பிரச்சனைகள்.! கவனமாக இருக்க அறிவுறுத்தல்.!

Default Image

கொரோனா சிகிச்சை முடிந்த பிறகு குணமடைந்தவர்களுக்கு மூச்சு பிரச்சனை, உடல் வலி போன்ற பின் விளைவுகள் ஏற்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

மேலும், அண்மையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கொரோனா தொற்றில் இருந்து மீண்டெழுந்தார். ஆனால், அவர் குணமடைந்த பிறகு அவருக்கு உடல் வலி இருந்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்த கொரோனா சிகிச்சைக்கு பிந்தைய உடல் பிரச்சனை தொடர்பாக, கோவிட் -19 தடுப்பு தேசிய பணிக்குழுவின் தலைவர் வி.கே. பவுல் கூறுகையில், ‘ கொரோனா சிகிச்சைக்கு பின்னர் வரும் உடல் மாற்றங்களை மருத்துவர் குழு கவனித்து வருகிறது. கொரோனா சிகிச்சைகள் பிற்காலத்தில் சில பாதிப்புகளை ஏற்படுத்தலாம். பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.’ என தெரிவித்தார்.

இது குறித்து சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷண் கூறுகையில், ‘ கொரோனா தொற்று மற்றும் இறப்பு விகிதம் கடந்த 5 நாட்களில் குறைந்துகொண்டே வருகிறது. ‘என குறிப்பிட்டார்.

மேலும், இந்தியாவில் 3 கொரோனா தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு சோதனையில் உள்ளதாகவும், அதில் ஒன்று மட்டும் அடுத்தகட்ட மனித சோதனைக்கு உட்படுத்த தயாராக உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. ஆனால், அதன் பெயரை கொரோனா தடுப்பு குழு வெளியிடவில்லை.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்