தமிழகத்தில் இன்று கொரோனா மட்டுமில்லமால் மற்ற நோயால் பாதிக்கப்பட்டு 107 பேர் உயிரிழப்பு.!

Default Image

தமிழகத்தில் இன்று 116 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,123 ஆக அதிகரிப்பு.

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், இன்று ஒரே நாளில் 5,795 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,55,449 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் இன்று 116 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோர் எண்ணிக்கை 6,123 ஆக அதிகரித்துள்ளது. இன்று உயிரிழந்த 116 பேரில், தனியார் மருத்துவமனையில் 32 பேரும், அரசு மருத்துவமனையில் 84 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் இன்று உயிரிழந்தோரில் கொரோனா மட்டுமின்றி, மற்ற நோயால் பாதிக்கப்பட்ட 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும், தமிழகத்தில் கொரோனவால் மட்டும் பாதிக்கப்பட்ட 9 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்