நாட்டு வெடிகுண்டு வீசி காவலர் கொல்லப்பட்ட வழக்கு.! தமிழக டிஜிபி தூத்துக்குடி விரைவு.!

Default Image

நாட்டு வெடிகுண்டு வீசி ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலை காவலர் சுப்பிரமணியன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழக டிஜிபி திரிபாதி தூத்துக்குடி வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தில், கொலை வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்த மேலமங்கலகுறிச்சியை சேர்ந்த துரைமுத்து என்பவரை கைது செய்வது தொடர்பாக, ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.முருகப்பெருமான் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. அத்தனிப்படைக்குக் கிடைத்த தகவலின்படி, காவல்துறையினர் இன்று (18.8.2020) மணக்கரை சந்திப்புக்கு விரைந்தனர்.

அப்போது, காவல்துறையினர் வருகையை அறிந்த துரை முத்து மற்றும் அவரது சகோதரன், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். காவல் துறையினர் அவர்களைத் தூத்தி பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது துரைமுத்து, தான் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டு ஒன்றை காவல்துறையினர் மீது வீசியாதாக தெரிகிறது. இதில், ஆழ்வார்திருநகரி காவல் நிலைய முதல் நிலைக் காவலர் திரு. சுப்பிரமணியன் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்டுவிட்டர்.

இந்த வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள டிஜிபி திரிபாதி தூத்துக்குடி வரவுள்ளார் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்