தலையில் டிவி விழுந்து 3 வயது குழந்தை உயிரிழப்பு..!

Default Image

தலையில் டிவி விழுந்து சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் சேர்ந்த 3 வயது குழந்தை உயிரிழப்பு

சென்னை கிழக்கு தாம்பரம் சேலையூர் சத்யா நகரில் வசித்து வருபவர் பாலாஜி, இவருக்கு 3 வயதுடைய கவியரசு என்ற குழந்தை ஒன்று உள்ளது ,இந்நிலையில் பாலாஜி தனது வீட்டின் அறையில் தொலைக்காட்சிப் பெட்டிக்கு மேல் தனது செல்போனை ஜார்ஜ் போட்டு வைத்துள்ளார் அப்பொழுது அவர் செல்போனுக்கு அவரது நண்பர் ஒருவர் வழியாக அழைப்பு வந்துள்ளது .

மேலும் போன் அடிக்கும் சத்தம் கேட்டவுடன் பாலாஜியின் குழந்தை கவியரசு ஓடி சென்று செல்போனை எடுக்கச் சென்றுள்ளார் அப்போது ஜார்ஜ் வயரில் குழந்தை சிக்கி அருகிலிருந்த தொலைக்காட்சிப் பெட்டி குழந்தையின் தலையில் விழுந்தது இந்நிலையில் சத்தம் கேட்டு ஓடி வந்த பாலாஜி மற்றும் அவரது மனைவி குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு கவியரசு உடலை கொண்டு சென்றனர்.

அப்போது அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர் இந்நிலையில் கவியரசு உடலை பிரேத பரிசோதனை செய்ய அனுப்பிவைத்தனர், மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் 174 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்