மூணாறு நிலச்சரிவு : உயிரிழப்பு எண்ணிக்கை 58ஆக உயர்வு.!

Default Image

மூணாறு நிலச்சரிவில் சிக்கி இன்று 2 சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில், மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் பெய்த கனமழையால் ராஜமலை பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் சிக்கிய காணாமல் போனவர்களை தேடும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் 10-வது நாளான இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மீண்டும் 2 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சிமென்ட் பாலத்திற்கு அருகிலுள்ள சரளைக்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட அந்த இரண்டு உடல்கள் சின்னத்தாய்(62) மற்றும் முத்துலட்சுமி (22)என்று தெரிய வந்துள்ளது. தற்போது நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 12 பேரை தேடும் பணிகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்