அடுத்தடுத்த முயற்சிகளும் பெரும் வெற்றி பெற ஒரு ரசிகனாக மனதார வாழ்த்துகிறேன் – அமைச்சர் வேலுமணி ட்வீட்

அடுத்தடுத்த முயற்சிகளும் பெரும் வெற்றி பெற ஒரு ரசிகனாக மனதார வாழ்த்துகிறேன் என்று  அமைச்சர் வேலுமணி தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி  சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக  அறிவித்தார்.தோனியின் ஓய்வு அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், தோனியின் ஓய்வு குறித்து பல அரசியல் தலைவர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் தோனியின் ஓய்வு குறித்து அமைச்சர் வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,இந்திய தேசத்தின் பட்டித்தொட்டிகளில் எல்லாம் பல கிரிக்கெட் வீரர்கள் உருவாக உந்து சக்தியாக இருந்து, உலக கிரிக்கெட் சாம்ராஜ்ஜியத்தின் சரித்திர நாயகனாக திகழ்ந்தவர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாகவும், தமிழ் மண்ணை நேசித்து தமிழ் மக்களின் அபிமான வீரராகவும் திகழ்பவர்.நம் தேசத்தின் கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களில் இமயமாய் உயர்ந்த தோனி உங்களின் அடுத்தடுத்த முயற்சிகளும் பெரும் வெற்றி பெற ஒரு கிரிக்கெட் ரசிகனாக மனதார வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.