தமிழக அரசின் இளைஞர் – அப்துல்கலாம் விருதுகள் அறிவிப்பு .!

Default Image

தமிழக அரசின் ஏ. பி. ஜே. அப்துல்கலாம் விருது ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனருக்கும், மாநில இளைஞர் விருதுகள் 3 பேருக்கும் முதல்வர் வழங்கினார்.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் 74வது சுதந்திர தினத்தையொட்டி, சென்னையில் உள்ள தலைமை செயலகமான கோட்டையில் உள்ள கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேசிய கொடி ஏற்றினார். அதனையடுத்து இந்த விழாவில் கொரோனா தடுப்பு பணிகளில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு துறைகளில் உள்ள முன்கள பணியாளர்களுக்கு சிறப்பு விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

அந்த வகையில் டாக்டர் ஏ. பி. ஜே அப்துல்கலாம் பெயரிலான விருதினை ஆனந்தம் இளைஞர் அறக்கட்டளை நிறுவனரான க. செல்வகுமாருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களால் வழங்கப்பட்டது. அதனையடுத்து மாநில இளைஞர் விருதுகள் 3பேருக்கு முதல்வர் வழங்கினார். மதுரையை சேர்ந்த அருண்குமார், கடலூரை சேர்ந்த ராம்குமார் மற்றும் சென்னையை சேர்ந்த அம்பேத்கர் ஆகியோருக்கு மாநில இளைஞர் விருதினை எடப்பாடி பழனிசாமி அவர்கள் வழங்கி கௌரவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்