3 பெண்களுக்கு கல்பனா சாவ்லா விருதை வழங்கினார் முதல்வர்.!

Default Image

74-வது சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கொடியேற்றினார். தேசிய  கொடியேற்றி பின்னர் முதல்வர் சிறப்பு விருதுகளை வழங்கினார்.

துணிவு, சாகச செயலுக்கான தமிழக அரசின் கல்பனா சாவ்லா விருதை 3 பெண்களுக்கு முதல்வர் பழனிசாமி வழங்கினார். பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த செந்தமிழ்செல்வி, முத்தம்மாள், ஆனந்தவள்ளிக்கு கல்பனா சாவ்லா விருது வழங்கப்பட்டது.

உலக சுகாதார நிறுவனத்தின் முதன்மை ஆராய்ச்சியாளர் சௌமியா சுவாமிநாதனுக்கு முதல்வர் சிறப்பு விருது வழங்கினார். கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக செயல்பட்டதற்காக மருத்துவர் சௌமியா சுவாமிநாதனுக்கு விருது தரப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்