இன்றைய நாள் (15.08.2020) எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்.!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்றைய நாள் இனியதாக இருக்கும். கடினமான முயற்சிகள் உங்களுக்கு சாதகமான பலன்களை தேடித்தரும்.

ரிஷபம் : தடைகளை தாண்டிய பிறகு உங்களுக்கு மன திருப்தி ஏற்படும். மனதை அமைதியாக வைத்துக்கொள்ள வேண்டும்.

மிதுனம் : பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் ஈடுபடுங்கள். அது உங்கள் மனதிற்கு ஆறுதலை தரும்.

கடகம் : இன்று நீங்கள் சூழ்நிலையை அனுசரித்து செல்ல வேண்டிய நாள். முக்கிய முடிவுகளை இன்று எடுக்க வேண்டாம்.

சிம்மம் : இன்றைய நாள் லாபகரமாக அமையும். சுற்றத்தாரின் ஆதரவு கிடைக்கும். அது உங்களுக்கு மகிழ்ச்சியை தரும் நல்ல காரியங்களை செய்து முடிப்பீர்கள்.

கன்னி : இன்றைய வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி கொள்ளுங்கள். அதன் மூலம் உங்கள் வாழ்வை முன்னேற்ற பாதைக்கு அழைத்து செல்லலாம். அது உங்களுக்கு சாதகமான பலன்களை தரும்.

துலாம் : உங்களுக்கான சரியான வழியை இன்று நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். அதற்கான திறமையை வளர்த்து கொள்ளவேண்டும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

விருச்சிகம் : இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாக அமையாது. குழப்பமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் தவறாக இருப்பதற்கு வாய்ப்புள்ளது.

தனுசு : புதிய நட்பு வட்டாரங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும். பயணங்கள் ஏற்படும் நாள்.

மகரம் : பிரச்சனைகளை நினைக்காமல், அதனை நினைத்து வருந்தாமல் மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யுங்கள். கோவிலுக்கு செல்வது மன ஆறுதலை தரும்.

கும்பம் : முறையாக திட்டமிட்டு செயல்பட்டால் கடினமான விஷயங்கள் கூட எளிதில் நிறைவடையும்.

மீனம் : தடைகளை தாண்டினால் உங்களுக்கு மன திருப்தி ஏற்படும். கவலைகளை மறக்க நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும்.

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.