100 படுக்கைகளுடன் பள்ளிக்கூடத்தில் திறக்கப்பட்ட கொரோனா சிறப்பு வார்டு.!

Default Image

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தவுபால் மாவட்டத்தில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையம் திறக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தவும், அதற்கு சிகிச்சை அளித்து விரைவில்  மக்களை குணப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

மணிப்பூர் மாநிலத்தில் உள்ள தவுபால் மாவட்டத்தில் வாங்ஜிங்கில் உள்ள லாம்டிங் மேல்நிலைப்பள்ளியில், கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தவதற்காக 100 படுக்கைகள் கொண்ட சிறப்பு வார்டு திறக்கப்பட்டது. இதனை அம்மாநில அமைச்சர் டாக்டர் தோச்சோம் ராதேஷ்யம் திறந்து வைத்தார்.

ஏற்கனவே, இம்மாவட்ட மருத்துவமனையில் 30 படுக்கையறைகள் கொண்ட கொரோனா வார்டும், ஜி.என்.எம் நர்சிங் காலேஜில் 100 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு சிகிச்சை மையமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்தபின் அமைச்சர் பேசுகையில், தவுபால் மாவட்டத்தில் உள்ள மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் கொரோனா சிகிச்சையில் சிறப்பாக பணியாற்றிவருவதாக தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்