டெல்லியில் மேலும் 1,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

டெல்லியில் இன்று ஒரே நாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

டெல்லியில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸின் தாக்கம் குறைந்து கொண்டே வருகின்றது. அந்த வகையில், இன்று ஒரே நாளில் 1,113 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,48,504 ஆக அதிகரித்தது. அதுமட்டுமின்றி, டெல்லியில் ஒரே நாளில் 1,021 பேர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், அங்கு குணமடைந்தோரின் எண்ணிக்கை 1,33,405 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,153ஆக அதிகரித்துள்ளது. அங்கு 10,946 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.