வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை – வானிலை மையம்

Default Image

வடமேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகுவதால் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு.

வடமேற்கு வங்ககடலில் புதிய காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகத்தில் இன்றில் இருந்து அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும். இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழக மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் ஒருசில இடங்களில் அதி கனமழை பெய்யக்கூடும்.

அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்