#Breaking: கொரோனா சிகிச்சை மையமான ஓட்டலில் தீ விபத்து..7 பேர் பலி.!

Default Image

விஜயவாடாவில் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்த சொகுசு ஓட்டல் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டு 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் சுவர்ணா பேலஸ் என்ற ஓட்டல் கொரோனா சிகிச்சை மையமாக செயல்பட்டு வந்தது. அதில் 50-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை திடீரென ஓட்டலில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயை அணைத்தனர்.

முதற்கட்ட தகவல்படி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் 7 பேர்  தீ விபத்தில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்