புதுச்சேரியின் ஏனாமில் நாளை முதல் 3 நாள் முழு ஊரடங்கு.!

புதுச்சேரியில் கொரோனா பரவல் எதிரொலியாக ஏனாமில் நாளை முதல் 3 நாள் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் புதுச்சேரி மாநிலம் ஏனாம் பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அங்கு கொரோனா  பாதிப்பு எண்ணிக்கையில் 274 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முதல் மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கை அமல்படுத்தபடுகிறது .

இந்நிலையில் மூன்று நாட்களுக்கு ஏனாமில் அனைத்து அத்தியாவசிய கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மருந்தகங்கள் 24 மணி நேரம் செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.