கோழிக்கோடு விமான விபத்து – இரங்கல் தெரிவித்த கமல்!

கேரளா கோழிக்கோடு விமான விபத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார் கமல் ஹாசன்.

கேரள மாநிலத்தில் உள்ள சர்வதேச விமான நிலையமாகிய கோழிக்கோடு விமான நிலையத்தில் நேற்று இரவு மழை காரணமாக விமானியின் கட்டுப்பாட்டை இழந்து, விமானம் சறுக்கி பள்ளத்தில் விழுந்ததால் ஏற்பட்ட பெரும் விபத்தில் 17 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் மேற்பட்டோர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் பலரும் இந்த விமான விபத்துக்காக இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த விமான விபத்தில் இரண்டு பைலட்களும் உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவருமாகிய கமலஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கோழிக்கோடு விமான விபத்தில் உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கொண்டிருப்பவர்கள் விரைவில் மீண்டு வர என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் கோழிக்கோட்டில் உள்ள குடிமக்களுக்கும் விமான நிலையத்தின் கீழ் வசிக்கும் ஊழியர்களுக்கும், பாதிக்கப்பட்ட மக்களுக்காக வேலை செய்துகொண்டிருக்கும் மருத்துவ நிபுணர்களுக்கும் எனது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,

author avatar
Rebekal