அமெரிக்காவில் டிசம்பருக்குள் உயிரிழப்பு 300,000-ஐ எட்டும்..ஆய்வில் அதிர்ச்சி..!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர முகத்தைக் காட்டி வருகிறது. அதிலும், அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா போன்ற நாடுகளின் கொரோனா பாதிப்பு  நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டியது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது.

இந்நிலையில், அமெரிக்காவில் உள்ள வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில், டிசம்பர் 1 -க்குள் கொரோனா வைரசால் அமெரிக்காவில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 300,000 ஐ எட்டக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

இப்போது முதல் டிசம்பர் வரை 137,000 பேர் இறந்துவிடுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. நோய்த்தொற்றுகள் அதிகரிக்கும் போது மக்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு, சமூக இடைவெளியை கடைபிடிக்கிறார்கள். பின்னர் நோய்த்தொற்றுகள் குறையும் போது, மக்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை  என்று இயக்குனர் டாக்டர் கிறிஸ்டோபர் முர்ரே தெரிவித்தார்.

அரிசோனா, கலிபோர்னியா, புளோரிடா மற்றும் டெக்சாஸின் முன்னாள் மையப்பகுதிகளில் நோய்த்தொற்றுகள் குறைந்து வருவதாகவும், ஆனால் கொலராடோ, இடாஹோ, கன்சாஸ், கென்டக்கி,  ஓக்லஹோமா, ஓரிகான் பகுதிகளில் நோய்த்தொற்றுகள் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nainar Nagendran BJP
BJP MLA Nainar Nagendran
Trisha Insta Story
Minister Ponmudi
DMK General Secretary Durai Murugan ,
Minister Ponmudi - DMK MP Trichy Siva