சுஷாந்த் சிங் மரண வழக்கு..ரியா சக்ரபோர்த்தி நேரில் ஆஜர்.!

Default Image

கடந்த ஜூன் 14 ம் தேதி பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் மும்பையில் தனது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் சிங்கின் மரணத்தில், அவரது காதலி ரியாவுக்கு தொடர்பு இருப்பதாக பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ராஜு நகர் காவல் நிலையத்தில் சுஷாந்த் சிங்கின்  தந்தை புகார் கொடுத்தார்.

அந்த புகாரில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியது, பணமோசடியில் ஈடுபட்டது என பல்வேறு குற்றசாட்டுகளை தெரிவித்தார். அந்த புகாரின் அடிபடையில், ராஜு நகர் போலீசார் ரியா உள்ளிட்ட 6 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தனர்.

பணமோசடியில் ஈடுபட்டதாக புகார் கொடுக்கப்பட்டதால்  அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியது. இதைதொடந்து, ரியா சக்ரபோர்த்தி நேரில் ஆஜராக பதில் அளிக்கவேண்டும் என அமலாக்கத்துறை நோட்டிஸ் அனுப்பியது.

இந்நிலையில், சுஷாந்த் சிங்ராஜ் மரண வழக்கு தொடர்பாக வழக்கின் விசாரணைக்காக மும்பையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ரியா சக்ரபர்தி நேரில் ஆஜர் ஆனார். பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ் ரியா சக்ரபோர்த்திடம் கேள்வி கேட்கப்பட்டு பதிவு செய்யப்படும் என அமலாக்கத்துறை தெரிவித்தது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்