இ-பாஷை வேகமாக வழங்க நடவடிக்கை – முதலமைச்சர் பழனிசாமி

Default Image

இ-பாஷை வேகமாக வழங்க நடவடிக்கை  எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி  தெரிவித்துள்ளார்.

கொரோனா பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.அந்த வகையில் இன்று நெல்லை மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் முதலமைச்சர் .

இந்நிலையில் இன்று நெல்லை மாவட்டத்தில் ரூ.196.75 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களுக்கு  முதலமைச்சர் பழனிசாமி அடிக்கல் நாட்டினார் . மேலும் தென்காசி மாவட்டத்திற்கான ரூ.78.77 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களையும் திறந்துவைத்தார்.

இதனிடையே முதலமைச்சர் பழனிச்சாமி பேசுகையில்,முறையாக செல்வோருக்கு இ-பாஸை வேகமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வருவதற்கு உடனடியாக இ-பாஸ் வழங்கப்படும்.இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்த்த மாநிலம் தமிழ்நாடு என்று தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்