கொரோனா நோய்த் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி பங்கேற்பு

Default Image

மதுரையில் கொரோனா நோய்த் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி பங்கேற்றுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பே அதிகரித்து வருகிறது.இதனை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.இதனிடையே தமிழக முதலமைச்சர் பழனிசாமி மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

அந்த வகையில் இன்று திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார் . திண்டுக்கல்லை தொடர்ந்து தற்போது  மதுரைக்கு சென்றுள்ளார் முதலமைச்சர் பழனிசாமி.மதுரை வடபழஞ்சியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை நல மையத்தை முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைத்தார்.

இந்நிலையில் மதுரையில் கொரோனா நோய்த் தடுப்பு ஆய்வுக் கூட்டத்தில் முதலமைச்சர் பழனிச்சாமி பங்கேற்றுள்ளார்.இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் செல்லூர் ராஜு,ஆர்.பி. உதயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today live 05 03 2025
blue ghost mission 1
Singer Kalpana
South Africa vs New Zealand
Rajinikanth watched Dragon
Southern Railway
Sivaji Ganesan's house