150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லாத மம்மூட்டி .!துல்க்கர் சல்மான் கூறிய தகவல் .!

Default Image

துல்க்கர், தனது தந்தை மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்று கூறியுள்ளார்

நடிகர் துல்க்கர் சல்மான், மாணவர்களுடன் சமீபத்தில் பேசிய உரையாடலில், தனது அப்பா மம்மூட்டி 150 நாட்களாக வீட்டை விட்டு வெளியே செல்லவில்லை என்றும், அவர் வெளியே செல்லாமல் எவ்வளவு நாட்கள் தன்னால்  இருக்க முடியும் என்பதை  தனது அப்பா பார்க்க விரும்புவதாகவும், அவர் தனக்கு தானே சவால் விட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் துல்க்கர் தனது தந்தையை வெளியே ஒரு டிரைவுக்காக செல்ல அழைத்த போது அவர் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் துல்க்கர் தனக்கு வீட்டில் இருக்க சலிப்பாக இருப்பதாகவும், வெளியே செல்வதற்கான வாய்ப்பை எதிர்நோக்கி காத்திருப்பதாகவும் உரையாடலில் கூறியுள்ளார். மம்மூட்டி தனது ஊரடங்கை பல்வேறு வகையில் கழித்து வருகிறார். சமீபத்தில் கூட மம்மூட்டி தனது கேமரா மூலம் கிளக் செய்த அழகான புகைப்படங்களை பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்