தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி – முதல்வர் பழனிசாமி

Default Image

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் பழனிசாமி திண்டுக்கல் மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அப்பொழுது செய்தியாளர்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி பேட்டியளித்தார்.அப்பொழுது அவர் கூறுகையில்,திண்டுக்கல் மாவட்டத்தில் இதுவரை 43,578 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உலக சுகாதார அமைப்பின் அறிவிப்பின்படி சிகிச்சை அளிக்கப்படுகிறது. அரசு அறிவிக்கும் வழிமுறைகளை பொது மக்கள் முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும்.கொரோனாவில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகம் உள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு நவம்பர் மாதம் வரை விலையில்லா அரிசி வழங்கப்படும்.திண்டுக்கல் மாவட்டத்தில் படிப்படியாக கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சிறப்பான பணியை மேற்கொண்ட ஆட்சியர்கள், மருத்துவர்கள் உள்ளிட்டோருக்கு பாராட்டுகள் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்