கொரோனா சிகிச்சையளிக்க அடுத்தடுத்து அனுமதியை இழந்த தனியார் மருத்துவமனைகள் .!

Default Image

கொரோனா வைரஸ் காரணமாக தற்போது தனியார் மருத்துவ மனைகள் கொரோனா சிகிச்சை வழங்க  மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது. கொரோனா சிகிச்சை தொடர்பான உரிய நெறிமுறைகள், சிகிச்சைக்கான அதிகபட்ச கட்டணம் நிர்ணயித்து அந்தந்த மாநில அரசுகள் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஹைதராபாத்தில் உள்ள விரின்ச்சி என்ற தனியார் மருத்துவமனையில் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்ததை தொடர்ந்து நேற்று முன்தினம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அரசாங்க அனுமதியை விரின்ச்சி  என்ற தனியார் மருத்துவமனை இழந்தது. ஹைதராபாத்தில் அனுமதியை இழந்த இது இரண்டாவது தனியார் மருத்துவமனையாகும்.

இதற்கு முன் டெக்கான் மருத்துவமனை என்ற மருத்துவமனை இதேபோன்ற புகார்களுக்காக கடந்த திங்களன்று கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கான அனுமதியை இழந்தது. கொரோனா நோயாளிகள் மற்றும் அவர்களது உறவினர்களின் மூலம் அதிக புகார்கள் வந்தால் தனியார் மருத்துவமனைகள் இதேபோன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் என்று மாநில அரசு தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்