குழந்தைகளின் படிப்புக்காக தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் நெகிழ்ச்சி செயல்

Default Image

குழந்தைகளின் படிப்புக்காக தனது தாலியை விற்று டிவி வாங்கிய தாயின் செயல் அனைவரையும் நெகிழ்ச்சியடைய செய்துள்ளது.

கொரானா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால் கடந்த சில மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மார்ச் மாதம் முதலே பள்ளி கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில் உள்ளது. மாணவர்களின் படிப்பு கெட்டுவிடக்கூடாது என்பதற்காக ஆன்லைன் மூலமாக பாடங்களை ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றன. ஆனால் அரசுப் பள்ளி மாணவர்களின் நிலை கருதி தமிழக அரசு தொலைக்காட்சி மூலம் பாடங்களை கற்பிக்க வழிவகை செய்துள்ளது.

இதனை கர்நாடக அரசும் பின்பற்றுகிறது. இருந்தாலும் தொலைக்காட்சி கூட இல்லாத சில வீடுகளும் இருக்கின்றன என புகார்கள் எழுந்தன. இந்நிலையில் கர்நாடகத்தில் உள்ள கடக் எனும் மாவட்டத்தில் உள்ள ராடார் நாகனூர் எனும் கிராமத்தை சேர்ந்த கஸ்தூரி என்பவர் தினசரி கூலி செய்து தனது இரு குழந்தைகளையும் பராமரித்து வருபவர். பள்ளியிலிருந்து கஸ்தூரியை தொடர்பு கொண்ட ஆசிரியர்கள் டிவி வழியாக குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கப்படும் என கூறியதை கேட்டு தனது  கழுத்தில் இருந்த தனது தாலியை இருபதாயிரம் ரூபாய்க்கு விற்று அதில் 14 ஆயிரம் ரூபாய்க்கு டிவி வாங்கி உள்ளார் கஸ்தூரி.

இதுகுறித்துக் அவர் கூறுகையில், எனது குழந்தைகள் பாடம் கற்பதற்காக உறவினர்கள் வீட்டுக்கு அனுப்பு எனக்கு விருப்பமில்லை. டிவி அத்தியாவசியமான ஒன்று தான், எனவே வேறு வழியில்லாமல் எனது தாலியை விற்று நான் குழந்தைகளுக்காக டிவி வாங்கி உள்ளேன். எனது கணவருக்கும் தற்பொழுது வேலை இல்லை என அவர் கூறியுள்ளார். குழந்தைகளுக்காக தாய் செய்துள்ள இந்த அர்ப்பணிப்பு அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்