நான் அடுத்த தோனியா… ரோஹித் சர்மா பதில்.!

Default Image

அடுத்த தோனி ரோஹித் சர்மா என்று ரெய்னா கூறியதற்கு ரோஹித் சர்மா பதிலளித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவிடம் அடுத்த தோணி யார் என்ற கேள்விக்கு பதிலளித்துள்ளார், அதில் அவர் கூறியது அடுத்த தோனி என்றால் கண்டிப்பாக நான் ரோஹித் சர்மாவை கூறுவேன். சமீபகாலமாக அவருடைய பேட்டிங் மிகவும் சிறப்பாக மேலும் ரோஹித் சர்மா கேப்டன்ஷி செய்யும் பொழுது அவருடைய கேப்டன்ஷி தோனி போலவே இருக்கும், அணியில் உள்ள வீரர்களுக்கு பொறுமையாக தோனியை போல் கருதுகளை கூறுவார் என்றும் சுரேஷ் ரெய்னா கூறிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளிக்கும் வகையில் ரோஹித் சர்மா சமீபத்தில் ரசிகர்களுடன் பேசும் பொழுது பதிலளித்துள்ளார் அதில் அவர் கூறியது, தோனி மிகவும் அமைதியானவர், அவரை போல யாரும் இருக்க முடியாது. ஒருவருடன் மற்றொருவரை ஒப்பீடு செய்வதை நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரும் தனது தனித்துவத்தால் பலம் மற்றும் பலவீனங்களை பெற்றவர்களாக இருப்பார்கள் என்று ரோஹித் சர்மா கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்