ராகுல் டிராவிட் பற்றி யாரும் பேசுவதில்லை… இர்பான் பதான்.!

Default Image

தோனி மற்றும் கங்குலி பற்றி பேசுபவர்கள் என் ராகுல் ட்ராவிட் பற்றி பேசுவதில்லை என்பது எனக்கு வருத்தம் தருகிறது என்று இஇர்பான் பதான் கூறியுள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் கடைசியாக 5 போட்டிகளில் போட்டிகள் விளையாடினேன் அதில் நான் அதிகமாக விக்கெட்களை வீழ்த்தி னேன், மேலும் ஒரு நாள் போட்டியில் அதிகமாக ரன்களை குவித்தேன் , ஆனால் யாரும் என்னை கண்டுகொள்ளவில்லை. அதன் பிறகு எனக்கு காயம் ஏற்பட்டது அதனால் என்னால் விளையாட முடியவில்லை அதன் பிறகு அணியில் எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

அதன் பிறகு பேசிய இர்பான் பதான் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் பற்றி யாரும் பேசுவதில்லை, எதற்கு என்று புரியவில்லை அதை நங்கள் எப்படி எடுத்துக்கொள்ள, பிடிக்கவில்லை என்று எடுத்துகொள்ளவா..? என்று கேள்வி எழுப்பி யுள்ளார்,மேலும் ராகுல் திராவிட் கேப்டன்சியில்தான் இந்திய அணி 16 ஒருநாள் போட்டிகளில் வென்று சாதனை படைத்தது. ஆனால் அதை பற்றி நீங்கள் யாரும் பேசவில்லை.

தோனி கேப்டன்ஷி, மற்றும் கங்குலி கேப்டன்ஷி பற்றி அனைவரும் பேசுறீர்கள், அதற்காக தோனி கேப்டன்ஷி மற்றும் கேப்டன்ஷி பற்றி நான் குற்றம் சொல்லவில்லை இவர்களது கேப்டன்ஷி மீது எனக்கு தனி மரியாதை உள்ளது, தோனி மற்றும் கங்குலி பற்றி பேசுபவர்கள் என் ராகுல் ட்ராவிட் பற்றி பேசுவதில்லை என்பது எனக்கு வருத்தம் தருகிறது என்றும் கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்