தென்மேற்கு பருவமழை செப்டம்பர் வரை நீடிக்கும்.!

Default Image

தென்மேற்கு பருவமழை வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.

கடந்த ஜூன் மாதம் நாட்டில் தென்மேற்கு பருவமழை பரவலாக பெய்ய தொடங்கியது, அதன் பின் நாளுக்கு நாள் மழை அதிகாகமாக பெய்து வருகிறது, இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறுகையில், தென் தமிழகத்தில் 13 % மேலாக மழை பெய்துள்ளது என்று கூறியுள்ளது.

மேலும் வடமாநிலங்களில் பொறுத்தவரை மழைக் குறைந்துள்ளது, மத்திய இந்திய பகுதியில் 3% மழை குறைந்து தென்மேற்கு பருவமழை பெய்ததாக கூறியுள்ளது, மேலும் வடகிழக்கு மாநிலங்களில் 12 சதவீதம் கூடுதலாக மழைப்பொழிவு இருந்ததாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் தென்மேற்கு பருவமழை வருகின்ற செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் மேலும் இந்த ஆகஸ்ட் மாதத்தில் பரவலாக 97 சதவீதம் அளவுக்கு பருவமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்