அயோத்தி அடிக்கல் விழா.. தலைமை குரு உதவியாளர் உள்ளிட்ட 14 போலீசாருக்கு கொரோனா.!

Default Image

அயோத்தியில், வருகிற 5-ந் தேதி ராமர் கோவில் கட்டுமானத்துக்கான பூமி பூஜை நடைபெறவுள்ளது. இந்த பூமி பூஜையில் பிரதமர் மோடி மற்றும் பாஜக மூத்த தலைவர்கள் மற்றும் பல மாநில முதல்வர்கள் அமைச்சர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்நிலையில், இந்த விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் தற்போது கோவிலின் தலைமை குருவின் உதவியாளரான பிரதீப் தாஸ் மற்றும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த 14 காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

திட்டமிட்டப்படி அயோத்தி கோவில் அடிக்கல் நாட்டு விழா நடக்கும் என கோவில் அறக்கட்டளை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதீப் தாஸ் என்பவர் தினமும் பூஜைகள் மேற்கொள்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 பிரதமர் மோடி வருவதை ஒட்டி 3 கிலோ மீட்டர் தொலைவில் ஹெலிகாப்டர் தரையிறங்க ஹெலிபேடு அமைக்கப்பட்டுள்ளது.  அடிக்கல் நாட்டு விழாவை ஒட்டி தூய்மைப் பணியில் 300 பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

அயோத்தில் இதுவரை 375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Carlsen Anna Cramling
Kolkata Knight Riders vs Lucknow Super Giants
tamilisai tvk vijay
sunil gavaskar rohit sharma mi
Chennai High Court tn government
China chips