மகாராஷ்டிராவில் ஆகஸ்ட்-31 வரை ஊரடங்கு.. மால்கள் மீண்டும் திறப்பு.!

Default Image

மகாராஷ்டிரா அரசு நேற்று  ஆகஸ்ட் 31 நள்ளிரவு வரை முழு ஊரடங்கை நீட்டிப்பதாக அறிவித்தது. மாநிலத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் சில தளர்வுகளை இந்த உத்தரவில் அளிக்கப்பட்டுள்ளது .

அன்லாக் 3 வழிகாட்டுதல்கள் நேற்று அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த அறிவிப்பு வந்தது. உத்தரவுப்படி, சினிமா அரங்குகள், , நீதிமன்றங்கள் மற்றும் உணவகங்கள் இல்லாத மால்கள் மற்றும் சந்தை வளாகங்கள் ஆகஸ்ட் 5 முதல் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும். முக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பின்பற்றுவது கட்டாயமாகும்.

அனைத்து அத்தியாவசிய கடைகளும் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை செயல்படும் . ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், வெளிப்புற பூப்பந்து மற்றும்  அணி அல்லாத விளையாட்டுக்கள் உடல் ரீதியான தூரத்தோடு அனுமதிக்கப்படும். நீச்சல் குளங்கள் செயல்பட அனுமதிக்கப்படாது என்று அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் நேற்று  ஒரே நாளில் 9,211 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,00,651 ஆக அதிகரித்துள்ளது.

மேலும் 298 பேர் உயிரிழந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 14,463 ஆக உயர்ந்தது. கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கையானது 2,39,755 ஆக உயர்ந்துள்ளது. இதன்காரணமாக, குணமடைந்தோரின் விகிதம் 59.84 சதவீதமாக உள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்