சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது – தமிழக முதல்வர் பழனிசாமி

Default Image

சென்னையில் கொரோனா பாதிப்பு குறைந்து வருகிறது.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், கொரோனா நிலவரம் குறித்தும் மருத்துவ நிபுணர் குழுவுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருகின்றார்.

இந்நிலையில், அந்த கூட்டத்தில் பேசிய அவர், இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா இறப்பு விகிதம் குறைவு என்றும், தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய தொடங்கி உள்ளது. நடமாடும் கொரோனா பரிசோதனை வாகனங்கள் மூலம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு தொற்று குறைக்கப்பட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தின் பிறமாவட்டங்களிலும் தொற்று குறைந்து வருகிறது. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்