#BREAKING : தமிழகத்தில் ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு- முதல்வர் அறிவிப்பு.!

Default Image

தமிழகத்தில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஊரடங்கு நாளையுடன்  நிறைவடைய உள்ள நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா.? அல்லது தளர்வுகள் வழங்குவதா..? என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன், முதல்வர் பழனிசாமி  ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனை சற்று நேரத்திற்கு முன் முடிவடைந்த நிலையில்,  தமிழகத்தில் ஜூலை 31-ம் தேதி வரை இருந்த ஊரடங்கு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிப்பு என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

அதன்படி, பல்வேறு கட்டுப்பாடுகளும், தளர்வுகளுடனும் ஆகஸ்ட் 31 -ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்படுகிறது.

ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் எந்தவித தளர்வு இன்றி தமிழகம் முழுவதும் முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வரவும் இ-பாஸ் கட்டாயம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்