பீகார் வெள்ளத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உயர்வு.!

Default Image

பீகாரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக இறப்பு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது, மேலும் கிட்டத்தட்ட  40 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பீகார் மாநிலத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வெள்ள நிலைமை நேற்று மிகவும் மோசமடைந்தது, மேலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்து உரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது, கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில பேரிடர் மேலாண்மை துறை தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் இதுதொடர்பாக மீட்புக்குழு அதிகாரிகள் பேசுகையில், 29 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பாதிப்பு அடைந்துள்ளனர் என்றும், சுமார் 12 ஆயிரத்து 800 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறினர்.
.
இந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 12 மாவட்டங்களில் கிட்டத்தட்ட ஆயிரம் கிராமங்களில் வசிப்பவர்கள் வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் கிழக்கு சம்பரன், கோபால்கஞ்ச், சரண், முசாபர்பூர், சீதாமாரி, ஷியோஹர், சுபால், கிஷன்கஞ்ச், ககாரியா மற்றும் சமஸ்திபூர் ஆகியவை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மற்ற மாவட்டங்கள்.

மேலும் இந்தோ-நேபாள எல்லையில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இப்போது 38,47,531 ஆக உயர்ந்துள்ளது, இது முந்தைய நாளிலிருந்து கிட்டத்தட்ட ஒரு மில்லியன் உயர்வு என்பது குறிப்பிடதக்கது.

இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வுத் துறை கூறியது மாநிலத்தில் சராசரியாக மொத்தம் 22 மி.மீ மழை பெய்தது, இது இயல்பை விட 89 சதவீதம் அதிகமாக இருந்தது. என்றும் கிழக்கு சாம்பரன், முசாபர்பூர் மற்றும் சீதாமாரி போன்ற வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் அதிக மழை பெய்தது, அங்கு மழையின் அளவு இயல்பை விட 300 சதவீதத்திற்கும் அதிகமாக இருப்பதாகவும் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்