#BREAKING: அடுத்த பரபரப்பு.. அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி.!

Default Image

கடந்த 23-ஆம் தேதி புதுச்சேரி மாநிலத்தில் வில்லியனூர் -விழுப்புரம் சாலையில் உள்ள எம்ஜிஆர் சிலை மீது  மர்ம நபர்கள் காவித்துண்டு அணிவித்தால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பிரச்சனை ஓய்வதற்க்குள் அடுத்த பரபரப்பாக இன்று கன்னியாகுமரியில் அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டது.

கன்னியாகுமரி குழித்துறை சந்திப்பு பகுதியில் உள்ள அண்ணா சிலை பீடத்தில் காவிக்கொடி கட்டப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. காவல் துறையினர் அண்ணா சிலை பீடத்தில் கட்டப்பட்ட காவி கொடியை தற்போது அகற்றினர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாள்களாக தலைவர்கள் சிலை மீது காவி கொடி, சாயம் பூசுவது போன்ற செயல்களில் மர்ம நபர்கள் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்