திமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சோனியாகாந்தி! நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்!

Default Image

திமுகவின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சோனியாகாந்திக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மருத்துவப் படிப்பில் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு தொடர்பாக மத்திய அரசு சட்டம் இயற்ற அழுத்தம் தரக்கோரி, சோனியா காந்தி உள்ளிட்ட 13 கட்சி தலைவர்களிடம் பேசியிருந்தார்.

இது குறித்து திமுக தலைவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், சென்னை உயர் நீதிமன்றத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினையடுத்து, முக்கிய அரசியல்கட்சித் தலைவர்களை தொலைபேசி வாயிலாகத் தொடர்புகொண்டு கீழ்க்காணும் கோரிக்கைகளுக்கு ஆதரவு கோரினேன். அதன்படி, உடனடியாக, கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட மத்திய அரசை வலியுறுத்துவது, அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாநிலங்கள் அளித்துள்ள மருத்துவ இடங்களுக்கு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை உறுதிப்படுத்துவது, மாநில இடஒதுக்கீட்டுச் சட்டங்களைப் பாதுகாப்பது என தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனையடுத்து, இந்த போராட்டத்திற்கு சோனியா காந்தி அவர்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில், அவரது ஆதரவுக்கு, திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்வீட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்