6-ம் வகுப்பு முதல் தொழில் கல்வி, M.Phil படிப்பு நிறுத்தம்.. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கைகள் இதோ!

Default Image

இன்று பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் புதிய கல்வி கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் அமித் கரே செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளித்தார்.அப்பொழுது அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கையானது 21-ம் நூற்றாண்டுக்கானது என தெரிவித்தார்.

மேலும், நாட்டின் கல்வி கொள்கையில் 34 ஆண்டுகளாக எந்த மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது என தெரிவித்த அவர், 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் கல்வி என்ற இலக்கு நிறைவேற்றப்படும்

புதிய கல்வி கொள்கையில் அறிமுகப்படுத்தப்பட்டவை:

  • UG படிப்புகள் இனி 3 அல்லது 4 ஆண்டுகளாக இருக்குமெனவும், PG படிப்புகள் 1 அல்லது 2 ஆண்டுகளாகவும், முதுநிலை மற்றும் இளநிலை படிப்புகள் 5 ஆண்டுகள் இருக்கும்.
  • M.Phil படிப்புகள் நிறுத்துவதாக அறிவிப்பு.
  • மருத்துவம், சட்டம் தவிர்த்து அனைத்து பாடங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
  • அனைத்து பாடப்பிரிவுகளையும் நிர்வகிக்க ஒரே அமைப்பு கொண்டு வரப்படும்.
  • கல்வி நிறுவனங்களில் இனி மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும்
  • 8-ம் வகுப்பு வரையிலான இலவச கல்வி, தற்பொழுது 12 ஆம் வகுப்பு வரை இலவச கட்டாயக் கல்வி.
  • உயர்கல்வித்துறை ஒழுங்குபடுத்த ஒழுங்காற்று ஆணையம் அமைக்கப்படும்.
  • மருத்துவம் மற்றும் சட்ட படிப்புகளை தவிர்த்து, அனைத்து பாடங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.
  • அனைத்து பாடப்பிரிவுகளையும் நிர்வகிக்க ஒரே அமைப்பு கொண்டு வரப்படும்.
  • 6-ம் வகுப்பு முதல் தொழில் கல்வி அமலில் வரும்.
  • புதிய கல்விக்கொள்கை மும்மொழிக் கொள்கையில் சமஸ்கிருதத்தை விருப்ப பாடமாக அறிமுகம் செய்யப்படும்.
  • எந்த மொழியையும் மாணவர்கள் மீது திணிக்க போவது இல்லை, அயல்நாட்டு மொழிகளையும் மாணவர்கள் படிக்க தேர்வு செய்யலாம்.
  • மாணவர்கள் தங்கள் விருப்பத்தின் அடிப்படையிலேயே மொழிகளை தேர்வு செய்யலாம்.
  • மும்மொழி கொள்கைக்கு அனுமதிக்கலாம் என்பதை அந்தந்த மாநில அரசுகள் முடிவு எடுக்கலாம்.
  • மாணவர்களுக்கு “சைகை மொழி” அறிமுகப்படுத்தப்படும்.
  • அனைத்து உயர்கல்விகளுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள் நடக்கும்.
  • தேசிய தேர்வுகள் அமைப்பு மூலம் இந்த தேர்வுகளை நடத்த ஏற்பாடு என அவர் கூறினார்.
  • அனைத்து உயர்கல்விகளுக்கும் தேசிய அளவில் பொதுத்தேர்வுகள் நடக்கும்.
  • மருத்துவம், சட்டம் தவிர்த்து அனைத்து பாடங்களும் ஒரே அமைப்பின் கீழ் கொண்டு வரப்படும்.

போன்ற கல்விக்கோள்கைகளை மத்திய அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர் மற்றும் ரமேஷ் போக்ரியால் அறிவித்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்