முன்னாள் எம்.எல்.ஏ நாஞ்சில் முருகேசன் கைது..!

Default Image

நாகர்கோவில் சார்ந்த 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவி கடந்த சில தினங்களுக்கு முன் ஒரு வாலிபர் உடன் சென்று விட்டார். இது குறித்து மாணவியின் தாய் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மாணவி மற்றும் வாலிபர் இருவரையும் போலீசார் மீட்டனர்.

பின்னர், மாணவியிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு பலர் தனக்கு பாலியல் தொல்லை செய்ததாக சிறுமி கூறினார். இதற்கு மாணவியின் தாய் உடந்தையாக இருந்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதுதொடர்பாக முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசன் ( 60), இடலாக்குடி பகுதியை சேர்ந்த பால் (66), அசோக்குமார் (43) கார்த்திக் (28) மற்றும் சிறுமியின் தாய் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறுமியின் தாய், அசோக்குமார், கார்த்திக் மற்றும் பால், ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

தலைமறைவாக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகேசனை கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்த நிலையில், இன்று கன்னியாகுமாரி போலீசார் கைது செய்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்