கொரோனாவிலிருந்து மீண்டு வந்த விஷால் பட நடிகை .!

Default Image

கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாக ஐஸ்வர்யா அர்ஜூன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நடுத்தர மக்கள் மட்டுமின்றி அரசியல் பிரமுகர்களும், பிரபலங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றும், மீண்டும் வந்துள்ளனர்.அந்த வகையில் பாலிவுட் பிரபலங்களான அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள், விஷால் மற்றும் அவரது தந்தை என பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

அவ்வாறு சமீபத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆக்ஷன் கிங் அர்ஜூனின் மகளும், நடிகையுமான ஐஸ்வர்யா அர்ஜூன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது தான் கொரோனாவிலிருந்து மீண்டு வந்துள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் குறிப்பிட்டுள்ளார். அதில் கடவுளின் அருளால் எனது சோதனையில் கொரோனா நெகட்டிவ் என்றும், உங்களது எண்ணங்களிலும், பிரார்த்தனைகளிலும் என்னை வைத்தமைக்காக மிக்க நன்றி என்றும், இந்த தொற்று இன்னும் முடிவடையவில்லை. எனவே தயவு செய்து கவனமாக இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள் என்று கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்