தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை ரூ.12,305 கோடி வழங்கிய மத்திய அரசு.!

Default Image

நேற்று மத்திய அரசு 2019-20 நிதியாண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையாக ரூ.1,65,302 கோடியை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கியுள்ளது. இதில், தமிழகத்திற்கு ஜிஎஸ்டி இழப்பீடாக ரூ.12,305 கோடி வழங்கியுள்ளது. மேலும், புதுச்சேரிக்கு ரூ.1,057கோடியை ஜிஎஸ்டி இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் 2019-2020-ஆம் ஆண்டுக்கான ஜிஎஸ்டி இழப்பிட்டுத்தொகை முழுவதும் விடுவிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 1-ஆம் தேதி புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கொண்டுவரப்பட்டது. மாநிலத்தின் வளர்ச்சியை பொறுத்து இந்த இழப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாநிலத்தின் வளர்ச்சி 14% ஐ விட குறைவாக இருந்தால் இந்த இழப்பீடு வழங்கப்படும். இந்த முறை இந்த இழப்பீட்டு தொகையை அரசு தவணை முறையில் வழங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்