செப்டம்பரில் தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடரை நடத்த முடிவு!

Default Image

வருடந்தோறும் நடத்தப்படக் கூடிய தமிழக சட்டப்பேரவை குளிர்கால கூட்டத்தொடர் வருகிற செப்டம்பர் தொடக்கத்தில் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

தமிழகத்தில் சட்டப்பேரவை விதிப்படி வருடம்தோறும் இரண்டு முறை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு வருகிறது. எப்பொழுதும் பிப்ரவரி மாதம் நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யவும், மே ஜூன் ஆகிய மாதங்களில் மானிய கோரிக்கை விவாதம் சட்டப்பேரவையில் நடத்தப்படும். கடந்த சில வருடங்களாக இந்த குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்படாமல் இருந்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு மார்ச் 9ம் தேதி தொடங்கப்பட்ட சட்டப்பேரவை ஏப்ரல் 9 வரை நடத்தப்பட வேண்டும் என்று கூறியிருந்த போதிலும், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மார்ச் 24-ம் தேதிக்குள் அவசர அவசரமாக கூட்டத்தொடர் முடிக்கப்பட்டது. இந்நிலையில் ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டபேரவை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டயாமாக்கப்பட்டுள்ளதால், வருகின்ற செப்டம்பர் 24-ம் தேதிக்குள் நிச்சயம் இந்த குளிர்கால கூட்டத்தொடர் நடத்தப்பட வேண்டும் எனவும் செப்டம்பர் 23-ஆம் தேதிக்குள் இந்த குளிர்கால கூட்டத்தொடரை நடத்த போவதாகவும் சட்டப்பேரவை வட்டாரங்கள் கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

TN Assembly -Ajith Kumar
TNGovt - mathiazhagan mla
RR player Vaibhav Suryavanshi
meenakshi amman temple
CM MK Stalin say an important announcement about Colony word
Tamilnadu CM MK Stalin speech in TN Assembly
Pakistan - Kashmir