உயர்நீதிமன்றத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும்- உச்ச நீதிமன்றம்.!

Default Image

தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகளை திறந்த தமிழ்க அரசுக்கு சில விதிமுறைகளை பின்பற்றி கடைகளை திறக்க அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால், தமிழக அரசு விதிமுறைகளை பின்பற்றவில்லை என கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்க தடைவிதித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது. தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்ச நீதிமன்றம்,  ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்கலாம் என்றும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு இடைக்காலத் தடை விதித்தது.

இந்நிலையில், இன்று மீண்டும்  உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஏற்கெனவே சென்னை உயர்நீதிமன்ற விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை தொடரும் என்றும்  இந்த விவகார மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தொடர்ந்து விசாரிக்கலாம் என  கூறியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்