இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு!

Default Image

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 50,000-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு.

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து பல நாடுகளில் இந்த வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த வைரஸை அழிப்பதற்கு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கியுள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பால் இதுவரை உலகளவில், 16,418,867 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 652,256 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 10,047,304 பேர் குணமடைந்து வீடு  திரும்பியுள்ளனர். இந்த வைரஸ் பாதிப்பில், உலக அளவில் அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் முதல் மூன்று இடத்தில் உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் இதுவரை இந்த கொரோனா வைரஸால், 1,436,019 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 32,812 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில், 50,525 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 716 பேர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்