இன்று தமிழகத்தில் பங்கேற்காத +2 மாணவர்களுக்கு மறுதேர்வு

Default Image

இறுதித் தேர்வில் கலந்துகொள்ளாத +2 மாணவர்களுக்கான மறுதேர்வு இன்று நடைபெறவுள்ளது.

தமிழகத்தில்,பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மார்ச் 24-ம் தேதி நடைபெற்ற +2 இறுதித் தேர்வில் சில மாணவர்கள் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், தேர்வு எழுதாத +2 மாணவர்களுக்கு மறுதேர்வு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி, தமிழகம் இன்று மறுதேர்வு நடைபெற உள்ளது. இதில் சுமார் 743 மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். 289 மையங்களில் தேர்வு நடைபெற உள்ளது. சென்னையில் மட்டும் 20 மையங்களில் 101 பேர் எழுத உள்ளனர்.

மாணவர்கள் படிக்கும் பள்ளிகளிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், மாணவர்களுக்கு மட்டும் தேர்வு மையத்துக்கு செல்ல சிறப்புபேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளனஎன அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்